உயர்அழுத்த மின்மாற்றி கட்டுப்பாட்டுக்கோபுரம் ரந்தம்பே மஹியங்கனை இடையிலான மினிப்பே பகுதியில் நிறுவப்பட்ட 132 kV மின் இணைப்பு கோபுரம் சீரற்ற வானிலையால் முற்றாக கடந்த 27/11/2025, ல் சேதமடைந்துள்ளது.
இதனால் அம்பாறைமாவட்டத்தில்சில இடங்களும், மட்டக்களப்புமாவட்டத்தில் சில இடங்களும்,படுவான்கரைப்பெருநிலத்தில் பல கிராமங்களுக்கும் இன்றுவரை 30/11/2025, மூன்றுநாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனை பூரணமாக சீர் செய்வதற்கு நிலத்தில் வெள்ளநீர் பரவுவதால் இன்னும் சில தினங்கள் ஏற்படலாம் என தகவல் ஒன்றுவெளியாகியுள்ளது.
அதனை முழுமையாக சீர் செய்யும் வரை லக்சபான நீர் மின்சார நிலையம் ஊடாக சிலமணித்தியாலங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றி மாற்றி மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம் முழுமையாக கிடைக்க சில நாட்கள் செல்லும் என நம்பப்படுகிறது.








