Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவிலாறு அணை உடைப்பு; கிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 3500 குடும்பங்கள்

மாவிலாறு அணை உடைப்பு; கிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 3500 குடும்பங்கள்

6 months ago
in செய்திகள்

வரலாறு காணாத வகையில், மாவிலாறு அணை உடைப்பெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அதிவேக வெள்ள நீரோட்டம், கிண்ணியா பிரதேசத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் நேரடி விளைவாக, குறிஞ்சாக்கேணி பாலம் (தற்காலிகப்பாலம்) முழுமையாக உடைந்துள்ளதால், கிண்ணியாவுக்கான தரைவழித்தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

​கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் இது ஒரு மிகப்பெரிய அனர்த்தமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாலத்தின் உடைப்பினால், ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 3500 குடும்பங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பிரதான நகரத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

​வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள் ​குறிஞ்சாக்கேணி பாலம் உடைந்ததுடன், கீழ்க்கண்ட ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளின் சுமார் 14,000 இற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

​குறிஞ்சாக்கேணி, நடுத்தீவு, முனைச்சேனை, காக்காமுனை​கச்சக்கொடித்தீவு இந்த ஐந்து பகுதிகளும் கிண்ணியா நகருக்கான அனைத்து நிலப் போக்குவரத்துகளையும் இழந்துள்ளதால், மக்கள் உணவு, மருந்துப்பொருட்கள் போன்ற தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காகக்கூட கிண்ணியா நகரை வந்தடைய முடியாத துயரமான நிலை ஏற்பட்டுள்ளது.​

போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், குறித்த பகுதிகளில் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாகப் பால்மா, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை உடனடியாக பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது.

​வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்ட மக்களைக் காப்பாற்றும் பணியில் முப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

படகுகள் மூலம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.​

மாவிலாறு வெள்ளம் காரணமாக, குறித்த கிராமங்களைச் சுற்றியுள்ள வயல் நிலங்கள் மற்றும் கால்நடைகள் வெள்ள நீரில் மூழ்கிப் பாரிய சேதமடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.​

ஏற்கனவே குறிஞ்சாக்கேணியில் நிரந்தரப் பாலம் இல்லாததால், இங்கு தற்காலிகப் பாலம் பயன்பாட்டில் இருந்தது. அத்தோடு பாலக்கட்டுமான பணிகள் முடியும் வரைக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட இயந்திரப் படகும் இன்னும் சேவையில் விடுபடுத்தப்படாமல் உள்ளது.

இதன் காரணமாக, இந்தத் தற்காலிகப் பாலம் உடைந்திருப்பது அப்பகுதி மக்களின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குறியாகியுள்ளது.​

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உடனடியாக படகு சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கமும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
மினிப்பே – நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்பு

மினிப்பே - நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.