வாகரை – கஜுவத்த கடற்கரையில் சனிக்கிழமை (06) காலை அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் வாழைச்சேனை வைத்தியாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








