சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை 27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 பேர் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.








