மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் முகமாக கல்குடா வலய கல்வி அலுவலகத்தினால் சித்திர கலை கண்காட்சி இன்று கிரான் மத்திய கல்லூரியில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றும் (19.12.2025) நாளையும் (20.12.2025) என இரண்டு நாட்கள் மேற்படி கண்காட்சி நிகழ்வு இடம் பெற உள்ளது.
கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் ரி. அனந்தரூபனின் வழிகாட்டலில் அபிவிருத்திக்கான பிரதி கல்வி பணிப்பாளர் ந.நேசகஜேந்திரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.




நிர்வாகத்திக்குரிய பிரதி கல்விப்பணிப்பாளர் எம். ஏ .றிஸ்மியாபானு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
தமிழ் பாட பிரிவுக்குறிய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நிர்மலா அகிலன் மற்றும் ஆசிரிய ஆலோசர்களும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வினை சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகர் வா. சுஜிவ் மற்றும் சித்திர பாட ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நவீன மற்றும் மரபு ரீதியான ஓவியப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.








