அண்மையில் விபத்துச் சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்ட ரன்வல எம்.பியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்துச் செய்ய மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க உத்தரவிட்டார்.
அந்த வழக்கு நேற்று (19) விசாரணைக்கு வந்தபோது ரன்வல எம்.பியின் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.அதேசமயம் காயமடைந்தவர்கள் மேற்படி எம்.பியால் வழங்கப்பட்ட உதவித்தொகையினையும் நிராகரித்தனர்.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எம்.பி உளநல பரிசோதனைக்கு அனுப்பப்படவேண்டுமென பணித்த நீதவான் ,வழக்கின் மேலதிக விசாரணையை ஜனவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.








