கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடைபெற்ற பிரதீபா விருது வழங்கும் விழா- 2025 கடந்த 24 ஆம் திகதி கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெற்றது.
இதில் 11 இடங்களைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்ததுடன், இலங்கையிலே முதல் தர கலாசார மத்திய நிலையம் என்ற விருதினையும் பெற்று மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது

அதேவேளை இன்னொரு பெருமைக்குரி விடயமாக கிழக்கு மாகாண திறமையான கலாசார மத்திய நிலையம் எனும் விருதுநையும் பெற்றுள்ளது

அந்த வகையில் எமது மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் பின்வரும் இடங்களைப் பெற்று சாதனை அடைந்துள்ளனர்.
1.சூழலை அழகுப்படுத்தும் பறவைகளின் செயற்பாடு – நடனம் 1ம் இடம்
2.கோலாட்டம்- குழு பெண்கள் 1ம் இடம்
3.தில்லானா – ஆண் தனி 1ம் இடம்
- மேலைத்தேய இசை – வாத்தியம் குழு 1ம் இடம்
5.சடங்கு இசைப் பாடல் குழு – 1ம் இடம்
- கடம் தனி – 1ம் இடம்
- மிருதங்கம் தனி -1ம் இடம்
8.ஜதீஸ்வரம் தனி பெண் – 2ம் இடம்
9.தோடயமங்களம் – குழு – 2ம் இடம்
10.விளையாட்டு வீடு- குழு நடனம் – 2ம் இடம்
11.பெண் – தனி இசை- 2ம் இடம்
போன்ற இடங்களை பெற்று மட்டக்களப்பு மண்ணுக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன் அதி சூரத்தாவ விருதினையும் விருதினையும் தன்னகத்தே பெற்று தொடர்ந்து 2 வது தடவையாக சாதனை படைத்துள்ளது மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்.
















