Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2024 முதல் இதுவரை 2,500 கிலோக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றி முழுமையாக அழிப்பு

2024 முதல் இதுவரை 2,500 கிலோக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றி முழுமையாக அழிப்பு

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 2024 முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து முன்னெடுத்த சோதனைகளில், சுமார் 2,500 கிலோகிராமுக்கும் அதிகளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் அதன் பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைச் சட்டத்தின் முன்னிறுத்த பொலிஸார், முப்படைகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாரிய சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சோதனைகளின் போது பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களை அழிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது.

அதற்கமைய கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் மூலம் கைப்பற்றப்பட்ட சுமார் 2,556 கிலோ 164 கிராம் போதைப்பொருட்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு 2024 ஆம் ஆண்டில் 1,894 கிலோ 512 கிராம் போதைப்பொருட்களும்,

2025 ஆம் ஆண்டில் 494 கிலோ 498 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் அழிக்கப்பட்டன.

2026 ஆம் ஆண்டின் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, நேற்றைய தினம் (2) வனாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள உயர் வெப்பநிலையைக் கொண்ட நவீன தகன உலைகளில் வைத்து 170 கிலோ 86 கிராம் ஹெரோயின் மற்றும் 306 கிராம் அபின் போதைப்பொருள் என்பன எரியூட்டப்பட்டன என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி
செய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி

August 5, 2026
இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
செய்திகள்

இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

August 5, 2026
கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை
செய்திகள்

கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை

August 5, 2026
தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
செய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

August 5, 2026
விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
செய்திகள்

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

August 5, 2026
கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2026
Next Post
நூரியவத்தை பகுதியில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்டு கொலை; தந்தை கைது

நூரியவத்தை பகுதியில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்டு கொலை; தந்தை கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.