கண்டி – உடுதும்புர -தேவஹந்திய பகுதியில் நேற்று மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் லேசானது என்றும், பீதியடைய எந்த காரணமும் இல்லை என்றும்,
நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.








