Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

7 months ago
in செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் தங்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, கொட்டகலை – ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை 4.30 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ரொப்கில் சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் புயல் காரணமாக, சுமார் 46 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் தளபாடங்கள், உடைகள் உள்ளிட்ட பல்வேறு உடைமைகள் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களுக்குத் தலா 25,000 ரூபா நிவாரணம் வழங்குவதற்காக கிராம உத்தியோகத்தர் விபரங்களைச் சேகரித்துச் சென்றார். ஆயினும், இதுவரை சுமார் 20 குடும்பங்களுக்கு மட்டுமே அந்த நிதி கிடைத்துள்ளதாகவும், மிகுதி 26 குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், “நாங்கள் அனைவரும் ஒரே அளவில்தான் பாதிக்கப்பட்டோம். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்துக் கேட்டால், கிராம உத்தியோகத்தரும் பிரதேச செயலக அதிகாரிகளும் ஒருவரையொருவர் கைகாட்டுகின்றனர். நாங்கள் வங்கிக்கும் பிரதேச செயலகத்திற்கும் அலைந்து திரிய வேண்டியுள்ளது.

அரசாங்கத்தால் எங்களுக்கு நான்கு பிஸ்கட் பெக்கற்கள் மாத்திரமே வழங்கப்பட்டன. அதையும் 5 வயதுக்குக் குறைந்தவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் சாப்பிடக்கூடாது எனக் கூறினர். வெள்ளம் வீட்டிற்குள் புகுந்தபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே நாங்கள் போராடினோம். ஆனால், கிராம உத்தியோகத்தர் வெள்ளம் புகுந்ததற்கான புகைப்படம் இருக்கிறதா எனக் கேட்கிறார். இது மிகவும் அநீதியானது,” எனத் தெரிவித்தனர்.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன், இது குறித்து நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இதன்போது, சிலருக்கான நிவாரணக் காசோலைகள் எழுதப்பட்டுள்ளதாகவும், அதனை நாளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, நாளை உரிய தீர்வு கிடைக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்து மக்கள் கலைந்து சென்றனர்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன், “ரொப்கில் பகுதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலருக்கு இலட்சக்கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 46 குடும்பங்களில் 20 பேருக்கு மட்டுமே 25,000 ரூபா கிடைத்துள்ளது. விடுபட்டவர்களுக்கு நிதியைப் பெற்றுக்கொடுக்க நான் நேரடி நடவடிக்கை எடுப்பேன். இல்லாவிடில் மக்களுடன் இணைந்து நானும் போராடுவேன்,” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அட்டாளைச்சேனை புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு
அரசியல்

அட்டாளைச்சேனை புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு

August 25, 2026
விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்
செய்திகள்

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

August 25, 2026
புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்வனவுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமுல்
செய்திகள்

புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்வனவுக்கான புதிய கட்டண முறை இன்று முதல் அமுல்

August 25, 2026
இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு
செய்திகள்

இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு

August 24, 2026
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு
செய்திகள்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

August 24, 2026
ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு

August 24, 2026
Next Post
அமைச்சர் லால் காந்த பௌத்த மத தலைவர்களை அவமதித்துள்ளார்; சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாமல் ஆவேசம்

அமைச்சர் லால் காந்த பௌத்த மத தலைவர்களை அவமதித்துள்ளார்; சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாமல் ஆவேசம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.