Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்கரைப்பற்றில் அரச வெள்ள நிவாரணம் மக்களுக்கு கிடைக்கப்பெறாததின் பின்னணியில் அரச அதிகாரிகள்

அக்கரைப்பற்றில் அரச வெள்ள நிவாரணம் மக்களுக்கு கிடைக்கப்பெறாததின் பின்னணியில் அரச அதிகாரிகள்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்று – காதிரியா, மீராவோடை, பதுர் நகர் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு அரச நிவாரணம் வழங்கப்படாமல் போன பின்னணியில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வெள்ள நிவாரணம் தொடர்பாக “ஏன் அரச உதவி வழங்கப்படவில்லை?” என்ற கேள்விக்கு கிடைத்த பதில் சமூகத்தை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

நவம்பர் 26, 27 ஆகிய தினங்களில் குறித்த பகுதிகளுக்குரிய சில கிராம உத்தியோகத்தர்கள், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு அனுப்பிய அறிக்கையில், “யாரும் பாதிக்கப்படவில்லை” என சமர்ப்பித்திருப்பதே அரச நிவாரணம் மறுக்கப்பட்டதற்கான காரணம் என உறுதியாகியுள்ளது. இது தகவலறியும் சட்டம் மூலம் உறுதி செய்யப்பட்ட உண்மை என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அறிக்கைகள் தற்போது கிடைத்துள்ள நிலையில், அதிகமான கிராம உத்தியோகத்தர்கள் Nil Report தான் அனுப்பியுள்ளனர் என்பது ஆவண ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலை வேறு. நவம்பர் 26, 27, 28 ஆகிய தினங்களில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மீராவோடைக்கு பின்னால் பல வீடுகள் நீரில் முழுமையாக மூழ்கியிருந்தன. நீரில் சூழப்பட்ட ஒரு வீட்டில் நான்கு சிறு குழந்தைகள், ஒரு சிறிய தகட்டுப் பிங்கானில் சிறிதளவு உணவை பகிர்ந்து உண்ட காட்சியை பார்த்த ஒருவர், “என் மனம் வெந்த புண் போல மாறிவிட்டது” என உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.

மின்சாரம் இல்லாத அந்த இருட்டிலும், சில மாநகரசபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, சமைத்த உணவுகளை மாநகரசபை வாகனங்களில் கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர். அந்த மனிதநேய நடவடிக்கைகள் சமூக ஊடகங்களிலும் பதிவாகியிருந்தன. அம்பாறை மாவட்டத்தில் கடமை புரியும் ஒரு அதிகாரி வழங்கிய தகவலின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 240 பேருக்கான நிவாரணத் தொகை, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு வழங்கப்படாமலேயே திரும்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதேச செயலாளர் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும், “வேலைப்பளு அதிகரிக்கும்” என்ற காரணத்தால், சில கிராம உத்தியோகத்தர்கள் திட்டமிட்டு Nil Report அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுப்பெற்று வருகிறது. இதிலேயே மிகவும் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், இந்த கரையோர மக்கள் இன்றும் “ஒரு நாள் அரச நிவாரணம் வரும்” என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

வெள்ளத்தில் சொத்துகளை இழந்து, இருட்டிலும் பசியிலும் தவித்த இந்த ஏழை மக்களுக்கு, ஆவணங்களில் “பாதிப்பு இல்லை” என்று எழுதப்பட்ட அந்த மனநிலை அது அலட்சியமா? மனிதநேயமற்ற நிர்வாகமா? அல்லது திட்டமிட்ட துரோகமா? இந்த சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணையும், பொறுப்பற்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் இருந்து வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
Next Post
டிப்பர் வாகனம் மதிலுடன் மோதி விபத்து; கிளிநொச்சியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

டிப்பர் வாகனம் மதிலுடன் மோதி விபத்து; கிளிநொச்சியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.