பொங்கல் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் கிளம்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, விசேட பூஜைகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட “பொங்கல் விழா“ இன்று (15) வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டுள்ளார்.

இதன்போது, பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்.









