மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடி அருள்மிகு நீர்முகப் பிள்ளையார் ஆலய நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.சி.பம்மக்குட்டி அவர்களின் தலைமையில்நேற்றைய தினம் (15) வியாழக்கிழமை வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.
முதலில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், ஆசியுரை, வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரை, நாட்காட்டி வெளியீடு இடம்பெற்றதுடன் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
குறித்த நாட்காட்டி அமரத்துவம் அடைந்த சங்கரப்பிள்ளை பொன்னுத்துரை, சயானுஜன் ஆகியோரின் நினைவாக அவர்களது குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை வந்தாறுமூலை வட்டார உறுப்பினர் த.பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ. யோகேஸ்வரன், வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சா.தெய்வேந்திரக் குருக்கள், வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மாணிக்கம் ஜெயம்பலம் குருக்கள், கண்ணகி அம்மன் ஆலய பிரதம பூசகர் திரு.கு.குணரெத்தினம், மாரியம்மன் ஆலய பிரதம பூசகர் ஞா.சதானந்தன், வந்தாறுமூலை நிர்முகப் பிள்ளையார் மற்றும் விஷ்ணு ஆலய நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.












