நாட்டில் இன்று மதப் பிரச்சினை இல்லை என்றும், மதங்களுக்கு இடையே மோதல்கள் நடைபெறவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பௌத்த கலாசாரத்தை மையமாகக் கொண்ட இந்த சமூக அமைப்பிற்குள் அனைத்து மதங்களும், கலாசாரங்களும் பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாக அவர் வலியுறுத்தினார்.
வடக்கு மக்கள் கதிர்காமத்திற்கு வருவதும், தெற்கு மக்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வழிபாட்டிற்குச் செல்வதும் இனவாதம் அல்ல; அது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையும் கலாசார பிணைப்புமாகும் என்றும் அவர் கூறினார்.
அதேபோல், அரசியலில் வெறுப்பு, குரோதம், பொறாமைக்கு இடமில்லை என தெரிவித்த நாமல், அடுத்ததாக உருவாகும் தனது அரசாங்கத்தில் இன, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் கௌரவமாக, பாதுகாப்புடனும் சம உரிமையுடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.








