Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போக்குவரத்து பொலிஸாருக்கு ரூ.50,000 இலஞ்சம் வழங்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனருக்கு விளக்கமறியல்

போக்குவரத்து பொலிஸாருக்கு ரூ.50,000 இலஞ்சம் வழங்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனருக்கு விளக்கமறியல்

6 months ago
in செய்திகள்

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்துனரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம நேற்று (22) உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் புதன்கிழமை (21) காலை 10.50 மணியளவில் போக்குவரத்து பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாததால் பொலிஸார், போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றுள்ளனர்.

பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.

இது தொடர்பில் பெம்முல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 21 இலட்சம் ரூபாய் அபராதம்!
செய்திகள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 21 இலட்சம் ரூபாய் அபராதம்!

July 11, 2026
கதிர்காமத்தில் இன்று காட்டுக்குள் நுழைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரம்
செய்திகள்

கதிர்காமத்தில் இன்று காட்டுக்குள் நுழைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரம்

July 11, 2026
இந்திய இசை உலகின் குயில் எஸ். ஜானகி காலமானார்!
உலக செய்திகள்

இந்திய இசை உலகின் குயில் எஸ். ஜானகி காலமானார்!

July 11, 2026
யாழ் நகரில் யாசகர்களை அகற்ற விசேட நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
செய்திகள்

யாழ் நகரில் யாசகர்களை அகற்ற விசேட நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

July 11, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச தலைமையில் புதிய அரசை அமைப்போம்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் வலியுறுத்தல்!
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச தலைமையில் புதிய அரசை அமைப்போம்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் வலியுறுத்தல்!

July 11, 2026
மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!
செய்திகள்

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

July 11, 2026
Next Post
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சிக்கிய கஸ்ஸப தேரர்; நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சிக்கிய கஸ்ஸப தேரர்; நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.