Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் முதியோர்

இலங்கையில் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் முதியோர்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் முதியோர் சனத்தொகையில் சுமார் 30 சதவீதத்தினர் பல்வேறு வகையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியோர் மனநல விசேட மருத்துவ நிபுணர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார்.

60 அல்லது 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களே இந்தப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இலங்கையில் முதியோர் சனத்தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முதியோர்களிடையே காணப்படும் மறதி மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகளைச் சாதாரண வயோதிப நிலை என எண்ணி சமூகம் அலட்சியப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று உலகம் எதிர்கொள்ளும் பாரிய சுகாதாரப் பிரச்சினையாகத் தனிமை காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

இலங்கையில் இளைஞர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதால், நாட்டில் தங்கியுள்ள முதியோர்கள் இந்தத் தனிமையால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

முதியோர்களிடையே மனநலப் பிரச்சினைகள் பரவுவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்துள்ளதாகவும், இதன் விளைவாக, உடல் சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் தமது பெற்றோருடன் அடிக்கடி தொலைபேசி அல்லது காணொளி மூலம் உரையாடுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தனிமையைத் தவிர்க்க முதியோர்கள் உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் மற்றும் சமூகத் தன்னார்வப் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அங்கொடை மனநல வைத்தியசாலையில் முதியோர்களுக்காக விசேட பிரிவுகள் மற்றும் தீகாயு எனப்படும் பகல்நேர சிகிச்சை மையம் போன்ற வசதிகள் தற்போது உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனியாக வாழும் முதியோர்கள் பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்களை எதிர்கொள்வதால், அவர்களைப் பாதுகாப்பதற்கான முறையான பொறிமுறையொன்றை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என விசேட மருத்துவ நிபுணர் மதுஷானி டயஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
யாழ் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளுக்கான அறிவிப்பு

யாழ் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளுக்கான அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.