மட்டக்களப்பு களுவங்கேணி கடலில் இன்று(28) அதிகாலை 04.00க்கு மீன்பிடிக்கச் சென்ற தோணி ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









