செங்கலடி, ஐயன்கேணி வின்னிங் ஸ்டார் பாலர் பாடசாலை மற்றும் பாரதி சனசமூக நிலையம் ஆகியன இணைந்து பாலர் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை அதிபர் S. கமல் (JP) தலைமையில் கடந்த 30ஆம் திகதி கோலாகலமாக நடத்தினர்.
இந்த நிகழ்வு நிக்கலாஸ் தேவாலய மண்டபத்தில் நடைபெற்றதுடன் அதிதிகளாக செங்கலடி பிரதேச சபை தவிசாளர், உபதவிசாளர் மற்றும் வட்டார பிரதேச சபை உறுப்பினர் கலந்து கொண்டனர்.
குறித்த விழாவில் பாடசாலையிலிருந்து முதலாம் தரத்திற்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கெளரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.



















