Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீதியில் திரியும் கட்டாக்காலி மாடுகளுக்கான தண்டத்தை 10 ஆயிரமாக உயர்த்திய மட்டு மாநகரசபை

வீதியில் திரியும் கட்டாக்காலி மாடுகளுக்கான தண்டத்தை 10 ஆயிரமாக உயர்த்திய மட்டு மாநகரசபை

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகளுக்கான தண்டப்பணம் 10ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வானது மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.

குறித்த அமர்வில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன்,சபையின் செயலாளர்,மாநகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல்வரின் தலைமையுரையுடன் சென்ற கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து சபையின் நிலையியல் குழுக்களினால் கலந்தாலோசனை செய்யப்பட்டு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் மாநகரசபை முதல்வரின் முன்மொழிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு சபையின் அனுமதிகள் பெறப்பட்டன.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதிலும் அதனை கட்டுப்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொள்வதாகவும் இதன் காரணமாக சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதன் காரணமாக மாநகரசபையினால் தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மாநகரசபை முதல்வரினால் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதுவரையில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும்போது பதிவுசெய்யப்பட்ட மாடுகளுக்கு 5000ரூபாவும் பதிவுசெய்யப்படாத மாடுகளுக்கு 7500ரூபாவும் அறவிடப்பட்டதாகவும் அதனை மாற்றி இனி வரும் காலங்களில் கட்டாக்காலி மாடுகளுக்கு 10ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்படும் என்ற முன்மொழிவு முதல்வரினால் முன்வைக்கப்பட்டது.

இதற்கு சபை அனுமதி வழங்கிய நிலையில் கட்டாக்காலி நாய்களினாலும் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி நாய்களினால் பல்வேறு விபத்துகள் இடம்பெறுவதுடன் பாதசாரிகளும் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் மாநகரசபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுவருவதுடன் நாய்கள் காப்பகம் ஒன்றிணை அமைப்பதற்கான செயற்பாடுகள் தனவந்தர் ஒருவர் உதவமுன்வந்துள்ளதாகவும் இது தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று கல்லடி பாலத்தில் உள்ள மின்சார விநியோகத்திற்கான நிதியினை செலுத்துவதற்கும் அதனை பராமரிப்பதற்குமான பொறுப்பினை மாநகரசபை ஏற்றுள்ளதன் காரணமாக அதற்கான நிதிவிடுவிப்புக்கான அனுமதிகோரப்பட்ட நிலையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் அனுமதி வழங்கப்பட்டது.

குறிப்பாக கல்லடி பாலம் உட்பட பல இடங்கள் இருளில்மூழ்கியுள்ளமை தொடர்பில் இங்கு உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அவற்றினை படிப்படியாக ஒளியூட்டுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அதற்கு அனைத்துவிட்டார உறுப்பினர்களும் உதவவேண்டும் என மாநகரசபை முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றபோதிலும் முன்மொழிவுகளுக்கு சபையின் அனுமதிகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து சபையின் நிலையியல் குழுக்களின் தலைவர்களின் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
கட்சிநிதிக்காக பெற்ற சம்பளத்தைத் திரும்பக் கோரும் ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி.க்கள்

கட்சிநிதிக்காக பெற்ற சம்பளத்தைத் திரும்பக் கோரும் ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி.க்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.