Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியா மக்களின் தேவையை பூர்த்திசெய்யவே கிவுல் ஓயா திட்டம்- இது இனவாதமல்ல; அமைச்சரவை பேச்சாளர்

வவுனியா மக்களின் தேவையை பூர்த்திசெய்யவே கிவுல் ஓயா திட்டம்- இது இனவாதமல்ல; அமைச்சரவை பேச்சாளர்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 மடங்கு செலவு அதிகரிப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்காகவும் குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கானதுமான அத்தியாவசிய வேலைத்திட்டமாகவே இந்த கிவுல் ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இது எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் அல்ல.

2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய அமைச்சரவை குறித்த கிவுல் ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தது.

இதற்காக அக்காலப்பகுதியில் 4170 மில்லியன் ரூபா செலவு மதிப்பிடப்பட்டிருந்தது. இது மகாவலி எல் வலயத்துக்குள்ளேயே காணப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அந்த திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. கொவிட் தொற்று மற்றும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணிகளால் இந்த திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியாவசியமானது என இனங்காணப்பட்ட வேலைத்திட்டத்தை, தற்போது நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கமைய தேசிய நிதியத்தின் ஊடாக 2026 – 2031ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தை முன்னெடுத்து அதனை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறிருப்பினும் அன்று 4170 மில்லியன் ரூபா செலவில் இதனை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது அது 23 456 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆரம்பிக்கப்பட்ட போது மதிப்பிடப்பட்ட தொகையை விட 6 மடங்கு செலவு அதிகரித்துள்ளது.

இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இனத்தை அடிப்படையாகக் கொண்டு எவருக்கும் நீர் வழங்கப்படுவதில்லை. எனவே இதனை அரசியல் மயமாக்கி வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காகப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். இந்த திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கத்துக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு
உலக செய்திகள்

கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு

July 21, 2026
2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
செய்திகள்

2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

July 21, 2026
நாட்டை வழிநடத்த கோட்டாவிடம் ஆலோசனை பெறுமாறு அனுரவிற்கு சாகர அறிவுரை
அரசியல்

நாட்டை வழிநடத்த கோட்டாவிடம் ஆலோசனை பெறுமாறு அனுரவிற்கு சாகர அறிவுரை

July 21, 2026
சொறிக்கல்முனை தேவாலய வீதியை புனரமைக்க தவிசாளரை கோரும் பொதுமக்கள்
செய்திகள்

சொறிக்கல்முனை தேவாலய வீதியை புனரமைக்க தவிசாளரை கோரும் பொதுமக்கள்

July 20, 2026
இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK
காணொளிகள்

இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK

July 20, 2026
மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் வைக்கப்பட்ட கைதி பிளேட்டால் தனது கழுத்தை அறுத்ததால் பரபரப்பு
செய்திகள்

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் வைக்கப்பட்ட கைதி பிளேட்டால் தனது கழுத்தை அறுத்ததால் பரபரப்பு

July 20, 2026
Next Post
பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.