Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதாளக் குழுக்கள் மீதான வழக்குகள்; சட்டத்தரணிகளுக்கு விசேட பாதுகாப்பு

பாதாளக் குழுக்கள் மீதான வழக்குகள்; சட்டத்தரணிகளுக்கு விசேட பாதுகாப்பு

4 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

‘‘பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கின்றனர்.

சாதாரண பிரஜைகளுக்கு தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் கிடையாது. பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (17) நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இன் கீழ் 2 இல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கவலைக்குரியது.

நாட்டின் பிரஜைகளின் உயிர்களை நாங்கள் அலட்சியப்படுத்தவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குண்டு.இதேநேரம் பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கின்றனர்.

சாதாரணப் பிரஜைகளுக்கு தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் கிடையாது.அக்குரேகொட பகுதி அதி பாதுகாப்பு வலயம் இல்லை. சட்டத்தரணிகளுக்கு தமது சேவை பெறுநர்களுக்காக முன்னிலையாகும் உரிமை உண்டு.

அது அவர்களின் தொழில் கடமை. அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பாதாளக் குழுக்களின் பெயர் குறிப்பிட்டு பொலிஸார் எவ்வித அறிக்கைகளையும் வெளியிடவில்லை.உயிரிழந்த சட்டத்தரணியிடம் பொலிஸார் ஏற்கெனவே வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த படுகொலை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு 12 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் அனைத்து விடயங்களையும் தற்போது வெளிப்படுத்த முடியாது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள். அதுதொடர்பில் பாராளுமன்றத்துக்கு விடயங்கள் அறிக்கையிடப்படும். பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவு ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை
செய்திகள்

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

June 7, 2026
Next Post
ஐநாவில் இலங்கைக்கு எதிராக 23 பெண்களும் 4 ஆண்களுக்கும் வழங்கியுள்ள சாட்சியம்

ஐநாவில் இலங்கைக்கு எதிராக 23 பெண்களும் 4 ஆண்களுக்கும் வழங்கியுள்ள சாட்சியம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.