ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நாடுகளின் படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் மதத் தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்குப் பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படையான ஐஆர்ஜிசி தகவல் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது மூன்றாவது நாளாக இஸ்ரேல், அமெரிக்கப் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நிலை என்ன? அவர் உயிருடன் இருக்கின்றாரா என்பது குறித்து தகவல் தெரியவில்லை என செய்திகள் நேற்றையதினம் வெளியாகியிருந்து.
இந்தநிலையில் ஈரானின் இந்தத் தகவல்களை “போலிச் செய்தி” (Fake News) என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், பிரதமர் பாதுகாப்பாக இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்குப் பிறகு நெதன்யாகு ஒரு வீடியோ உரையை நிகழ்த்தியுள்ளார்.
அதேசமயம் ஈரான் மீது நடத்தப்படும் போர் தாக்குதலால் உலகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது.








