அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வந்த நிலையில், தற்போது சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் ஈரானுக்கு அண்மையில் உள்ள அண்டை நாடுகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்கு, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
அத்துடன் மிகவும் முக்கியமான ஒரு நிபந்தனையையும் அவர் முன்வைத்துள்ளார்.
”அண்டை நாடுகளின் நிலப்பரப்பில் இருந்து ஈரான் மீது எந்தவொரு தாக்குதல்களும் முன்னெடுக்கப்படாவிட்டால், அந்த நாடுகளை ஈரான் இனி ஒருபோதும் இலக்கு வைத்துத் தாக்காது” என அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.








