Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானின் புதிய அதி உயர் தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் தெரிவுசெய்யப்பட்டார்

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் தெரிவுசெய்யப்பட்டார்

14 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது கடந்த 28 ஆம் திகதி ஈரானிய அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அங்கு இடைக்கால பொறுப்பை நிபுணர்கள் சபை ஏற்றது.

பின்னர் 80 பேர் கொண்ட நிபுணர்கள் சபை புதிய அதி உயர் தலைவரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில், நேற்று இந்த முடிவை இறுதி செய்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

56 வயதான மொஜ்தபா கமேனி, திரைமறைவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நபர் ஒருவராகக் கருதப்பட்டார்.

பாசிஜ் துணை இராணுவப் படையை வழிநடத்தியது மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் இவ்வாறான யூகங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த போதிலும், அவர் இதுவரை இஸ்லாமிய குடியரசில் எந்தவொரு அதிகாரப்பூர்வ பதவியையும் வகிக்கவில்லை.

கடந்த காலத்தில் மொஜ்தபா கமேனியின் பெயர் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது செல்வாக்கை வளர்த்தெடுத்த அவரது தந்தையைப் போன்ற ஒரு தலைவராக உருவெடுப்பதற்கு சில காலம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்சியின் உயர்மட்டப் பிரிவுகளுக்கு இடையே நிலவும் பல்வேறு பிளவுகளைச் சரிசெய்யும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுவதே இப்போது அவரது முக்கியப் பணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு போர் பதற்றம்; உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்; நாணய நிதியம் எச்சரிகை
உலக செய்திகள்

மத்திய கிழக்கு போர் பதற்றம்; உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்; நாணய நிதியம் எச்சரிகை

March 9, 2026
CEB மின் விநியோகப் பொறுப்புகள் EDL ற்கு மாற்றம்; போராட்டத்தை ஆரம்பித்த 25 தொழிற்சங்கங்கள்
செய்திகள்

CEB மின் விநியோகப் பொறுப்புகள் EDL ற்கு மாற்றம்; போராட்டத்தை ஆரம்பித்த 25 தொழிற்சங்கங்கள்

March 9, 2026
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கெரி கேர்ஸ்டன் நியமனம்
செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கெரி கேர்ஸ்டன் நியமனம்

March 9, 2026
யாழில் இரு குருக்களிடையே வாள்வெட்டில் முடிந்த சண்டை; ஒருவர் பலி
செய்திகள்

யாழில் இரு குருக்களிடையே வாள்வெட்டில் முடிந்த சண்டை; ஒருவர் பலி

March 9, 2026
மத்திய வங்கியில் திருட்டு; ஆறு பேர் கைது
செய்திகள்

மத்திய வங்கியில் திருட்டு; ஆறு பேர் கைது

March 9, 2026
பாதுகாப்பை தீவிரப்படுத்தியது துருக்கி!
உலக செய்திகள்

பாதுகாப்பை தீவிரப்படுத்தியது துருக்கி!

March 9, 2026
Next Post
ரி20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக இந்தியா வென்றது

ரி20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக இந்தியா வென்றது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.