இஸ்ரேலை இலக்குவைத்து கடந்த ஒரு மணித்தியாலத்துக்குள் புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் தற்போது இந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இத் தாக்குதல் இஸ்ரேலின் மூன்று இடங்களில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு கட்டார் அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.








