இலங்கை பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து “ஸ்ட்ராபெர்ரி க்விக் மெத்” (Strawberry Quick Meth) எனப்படும் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது “கிரிஸ்டல் மெத்” (Crystal Meth / Methamphetamine) வகையைச் சேர்ந்த ஆபத்தான போதைப்பொருளாகும்.
இந்த போதைப்பொருள் “ஸ்ட்ராபெர்ரி பாப் ராக்ஸ்” (Strawberry Pop Rocks) போன்ற இனிப்பு மிட்டாய்களைப் போல தோற்றமளிக்கும். ஸ்ட்ராபெர்ரி வாசனை கொண்ட இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பொருள், வாயில் போட்டவுடன் வெடிக்கும் இனிப்பு மிட்டாய் போல இருப்பதால் மாணவர்கள் எளிதில் ஏமாறும் அபாயம் உள்ளது.
அதேசமயம் சென்றவருடம் (2025) இந்த போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக இந்தியாவின் சென்னை பகுதியில் பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் கஞ்சா போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு கொண்ட கஞ்சிபாணி இம்ரான் தலைமையிலான கும்பல், மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருளை தமிழகத்திற்கு விநியோகம் செய்து வருவதாகவும் சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில் அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டான.
இதையடுத்து இந்திய மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகிலுள்ள கடைகளில் பொலிசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இனிப்பு மிட்டாய் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த போதைப்பொருளை மாணவர்கள் தவறுதலாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதால், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








