அமெரிக்காவின் தலைநகரமான வாசிங்டன் டிசி நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்த ஜெப்ரி எப்ஸ்டைன் ஆகியோரின் உருவங்களை காட்டும் ஒரு சர்ச்சைக்குரிய சிலை அண்மையில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சிலை 2026 மார்ச் மாத ஆரம்பத்தில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தேசிய வணிக வளாக பகுதியில் தற்காலிகமாக வைக்கப்பட்டது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிலை வைக்கப்பட்டதும் பலர் அந்த இடத்திற்கு வந்து அதை பார்வையிட்டு புகைப்படங்களும் எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சிலை அரசு அல்லது அதிகாரப்பூர்வ அமைப்புகளால் வைக்கப்படவில்லை. அரசியல் விமர்சனத்தை வெளிப்படுத்தும் எதிர்ப்பு கலை நிறுவல் என்ற வகையில் ஒரு செயற்பாட்டாளர் கலைக்குழுவால் அமைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிலையின் வடிவமைப்பில், டிட்டானிக் திரைப்படத்தில் வரும் பிரபலமான காட்சி போன்று இரண்டு உருவங்களும் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இடையிலான தொடர்பு குறித்து அரசியல் விவாதத்தை உருவாக்கும் நோக்கில் இந்த கலை நிறுவல் உருவாக்கப்பட்டதாக விளக்கப்படுகிறது.








