சாணக்கியன் எம்பியால் தொடரப்பட்ட நிகழ்நிலை காப்புச்சட்ட வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றின் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆஜராகிறார்.
ஊடகங்கள் மூலம் தன் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்யப்பட்ட நிகழ்நிலைக்காப்புச் சட்ட வழக்கு தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் ஊடக நிறுவனம் உற்பட 23 பேர் பெயரிடப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஒரு பகுதியினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆயராக உள்ளார்.
நிகழ்நிலைக்காப்புச் சட்டத்திற்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி பலமான எதிர்ப்புக்களை காட்டிய நிலையில் அவர்கள் சார்ந்த கட்சி பாராளுமன்ற உறுப்பினரே குறித்த சட்டத்தை பயன்படுத்தி வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது








