ரஷ்யாவுடன் போர் புரிந்து வரும் உக்ரைனுக்கு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி (100 கோடி யூரோ) மதிப்பிலான புதிய இராணுவ உதவிகளை வழங்க ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முன்வந்துள்ளது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இடையே கையெழுத்தான ஒப்பந்தப்படி, ஏவுகணைகள் மற்றும் நவீன ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளன.

“போர் முடியும் வரை உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்” என ஸ்பெயின் உறுதி அளித்துள்ளது.








