மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று (19) மாலை யாசகர்கள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
புனித நோன்பு காலத்தை முன்னிட்டு பல பகுதிகளில் இருந்து வருகைதந்த யாசகர்கள் குழுக்கள், கடைகள் முன்பாக தங்கியிருந்த நிலையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியுள்ளது.
மோதலில் காயமடைந்த இருவரும் காத்தான்குடி காவல்துறையின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து காத்தான்குடி காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.








