முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐந்து பேர் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் இன்றைய தினம் வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது இவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைவாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவரது மூத்த புதல்வர் ஜொஹான் பெர்னாண்டோ, இளைய புதல்வர் ஜெரம் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








