Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை காணொளி எடுக்க முயன்ற இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை காணொளி எடுக்க முயன்ற இலங்கையர்கள் காயம்

4 months ago
in உலக செய்திகள், செய்திகள்

இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை காணொளி எடுக்க முயன்ற நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

தாக்குதலின் போது அருகில் இருந்த கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறியதில், அவற்றின் துண்டுகள் இவர்களின் தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் குத்தியதாலேயே இவர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

காயமடைந்த நான்கு இலங்கையர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை குறித்துத் தூதரகம் கண்காணித்து வருகின்றது.

ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியபோது, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லாமல் பொது இடத்தில் நின்றுகொண்டு காணொளி எடுத்த போதே இவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் எடுத்த காணொளிகள் சமூக ஊடகங்களிலும் பரவியுள்ளன.

இவர்களின் இத்தகைய செயல் இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளை மீறும் செயல் என தூதுவர் சுட்டிக்காட்டினார்.

ஏவுகணைத் தாக்குதலுக்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். அந்த ஒலியைக் கேட்டவுடன் உடனடியாக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தஞ்சம் புக வேண்டும். எக்காரணம் கொண்டும் தாக்குதல்களை வேடிக்கை பார்க்கவோ அல்லது காணொளி எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் இந்தத் தாக்குதலால் இஸ்ரேலின் முக்கிய உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இதேவேளை ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி புதிய வகை ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும், அவற்றை தமது வான் பாதுகாப்பு கட்டமைப்பு அடையாளம் கண்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் (IDF) அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் விடுத்துள்ள இரண்டாவது அபாய எச்சரிக்கை இதுவாகும் என அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலின் வான்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவை ஈரானின் புதிய ரக ஏவுகணைகள் என இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பு அடையாளப்படுத்தியுள்ளது. இதனால் நாடு முழுவதும் அபாயச் சங்குகள் முழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பான பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் முறை நாளைமுதல் மீண்டும் ஆரம்பம்

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் முறை நாளைமுதல் மீண்டும் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.