2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், ஒரு மாணவிக்கு தலா 1,440/- ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கப்படும் எனவும் தலா 720/- ரூபா பெறுமதியான இரண்டு பெறுமதிச் சீட்டுகள் ஒவ்வொரு மாணவிக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் தமது விருப்பத்திற்கேற்ப பின்வரும் முறைகளில் அணையாடைகளை கொள்வனவு செய்யலாம்,
இதனடிப்படையில், தலா 120/- ரூபா பெறுமதியான 08 அணையாடைகள் கொண்ட 12 பக்கெட்டுகள், அல்லது, தலா 180/- ரூபா பெறுமதியான 10 அணையாடைகள் கொண்ட 08 பக்கெட்டுகள்
இத்திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவிகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வருடம் முழுவதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.








