அம்பாறை மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும், கிழக்கிலங்கையின் மூத்த பத்திரிகையாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் இன்றைய தினம் காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் நிந்தவூரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது மட்டு ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பவற்றின் ஊடகவியலாளர்கள் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான இவர் அம்பாறை மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளராகவும், பல ஊடக அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளிலும் அங்கம் வகித்து வந்தவராவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகளில் சிரேஸ்ட ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருமான சிவம் பாக்கியநாதன், மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வ.கிருஸ்ணகுமார் உள்ளிட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









