Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யக்கல FLSP அலுவலகத்தை JVP கைப்பற்றியது சட்டவிரோதம்: கம்பஹா நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

யக்கல FLSP அலுவலகத்தை JVP கைப்பற்றியது சட்டவிரோதம்: கம்பஹா நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

4 months ago
in அரசியல், செய்திகள்

கம்பஹா – யக்கல பகுதியில் உள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னனி (JVP) கைப்பற்றியது சட்டவிரோதமானது என கம்பஹா நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான மனுவின் விசாரணை நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அலுவலகத்தை முன்னணி சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறு ஜே.வி.பியினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தைக் கைப்பற்றியது சட்டவிரோதமானது என அறிவித்த பின்னர், அந்த அலுவலகத்தை FLSPயிடம் ஒப்படைக்குமாறு கம்பஹா கூடுதல் நீதவான் ஷிலானி பெரேரா உத்தரவிட்டதாக அக்கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அலுவலகத்திலிருந்து முன்னணி சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களை விரட்டியடித்ததும் சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜே.வி.பியினருக்கு உத்தரவிடக் கோரி, முன்னணி சோசலிசக் கட்சி கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

மேற்படி கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமிர கொஸ்வத்த மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதுடன் ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் பலரும் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.

கடந்த வருடம் செப்டம்பரில் யக்கலவில் உள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் அலுவலகத்திற்குள் ஜே.வி.பி ஆதரவாளர்கள் குழு ஒன்று புகுந்து, அங்கிருந்த சிலரைத் தாக்கிய பின்னர், அலுவலகத்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்போது, காவல்துறையினரும் பாரபட்சமாக நடந்துகொண்டதாக முன்னணி சோசலிசக் கட்சியினர் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!

July 30, 2026
உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!

July 30, 2026
விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை
செய்திகள்

விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

July 30, 2026
தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
Next Post
அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.