Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை கல்வி வலயத்தில் 6 பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர் இன்மையால் பாடசாலை நிர்வாகம் பாதிப்பு

கல்முனை கல்வி வலயத்தில் 6 பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர் இன்மையால் பாடசாலை நிர்வாகம் பாதிப்பு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள ஆறு முக்கிய பாடசாலைகளில் தற்போது நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படாத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய வருடாந்த அதிபர் இடமாற்ற நடவடிக்கையின் பின்னர், சில பாடசாலைகளில் பணியாற்றிய அனுபவமிக்க அதிபர்கள் உரிய பதிலீடு இல்லாமல் மாற்றப்பட்டதாகவும், ஓய்வு பெற்ற அதிபர்களுக்குப் பதிலாக புதிய அதிபர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், பாடசாலை நிர்வாகம் சீர்குலைந்து கல்விச் செயல்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாக கல்வி வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

இந்த நிலை மருதமுனை, கல்முனை, மாவடிப்பள்ளி, காரைதீவு மற்றும் சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் காணப்படுகிறது.

அதன் அடிப்படையில் மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி, கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயம், மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலயம், காரைதீவு இ.கி.மி ஆண்கள் பாடசாலை, காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலையே இந்த வெற்றிடம் நிலவுகிறது.

மேலும், தற்போது பாடசாலைகளுக்கான அதிபர் நியமன அதிகாரம் முழுமையாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் மையப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, தரம் III பாடசாலைகளுக்கான அதிபர்களை வலயக் கல்வி பணிப்பாளர் நியமித்ததுடன், தரம் II பாடசாலைகளுக்கான நியமனங்கள் மாகாண கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதேபோல் 1AB மற்றும் 1C தர பாடசாலைகளுக்கான அதிபர் நியமன அதிகாரம் மாகாண கல்வி செயலரிடம் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த மையப்படுத்தப்பட்ட நடைமுறையினால் தாமதங்கள் ஏற்பட்டு, பல பாடசாலைகள் நிரந்தர தலைமை இன்றி செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் ஏ. எல். எம். முக்தார் கவலை வெளியிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
மொசாட் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக NPP செயற்படுவதாக நிசாம் காரியப்பர் குற்றச்சாட்டு

மொசாட் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக NPP செயற்படுவதாக நிசாம் காரியப்பர் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.