ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து, 15,400 டன் எல்பிஜி (LPG) ஏற்றிய ‘கிரீன் ஆஷா’ என்ற இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல் நவி மும்பை துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதலுக்குப் பிறகு குறித்த பகுதிக்கு வந்தடைந்த முதல் கப்பல் இதுவாகும் என ஜவாஹர்லால் நேரு துறைமுகத்தை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முன்னேற்றம், தற்போதைய சிக்கலான புவிசார் அரசியல் சூழ்நிலைகளிலும் இந்தியா தனது எரிசக்தி விநியோகத்தை நிலைநிறுத்தும் திறனை வெளிப்படுத்துகிறது.
போர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியாவை வந்தடைந்த ஒன்பதாவது கப்பல் ‘கிரீன் ஆஷா’ ஆகும். இதற்கு முன்பு ஏழு எல்பிஜி கப்பல்கள் மற்றும் ஒரு கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக வந்தடைந்திருந்தன.
மேலும், கப்பலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், கடல்சார் செயல்பாடுகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதுடன், நாட்டிற்கு அத்தியாவசியமான எல்பிஜி விநியோகமும் சீராக நடைபெறுகிறது என்றும் துறைமுகம் குறிப்பிட்டுள்ளது.
இதனுடன், மத்திய அரசு பல நாடுகளுடன் தொடர்பில் இருந்து நிலைமையை கண்காணித்து வருவதுடன், தொழில்துறைகளுக்கான எல்பிஜி விநியோகத்தையும் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், முந்தைய பயன்பாட்டின் 70 சதவீதம் வரை தொழிற்சாலைகள் எரிவாயுவைப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.








