Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கடந்த 6 தினங்களில் 4 கொலை சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பில் கடந்த 6 தினங்களில் 4 கொலை சம்பவங்கள் பதிவு

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இனம் தெரியாதோரல் வெட்டியும் கொத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் 58 வயதுடைய விவசாயி ஒருவர் மிளகாய் தோட்டம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 4 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் இன்று காலையில் விவசாயியான சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய காசிநான் ஜெயகாந் என்பவரது தோட்டத்தில் அவரை வெட்டியும் கொத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள விளாவெட்டுவான் நாவற்குடா பிரதேசத்தில் கடந்த 13ம் திகதி இடம்பெற்ற மரணவீடு ஒன்றில் இரவில் உறவினர் இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது மண்வெட்டி பிடியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய 19 வயது இளைஞனை 14ம் திகதி செவ்வாய்கிழமை கைது செய்ததுடன் சிகிச்சை பெற்று வந்த 35 வயதுடைய தங்கத்துரை ரவீந்திரா நேற்று சனிக்கிழமை (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 17ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி பிரதேசத்தில் மதுபானம் குடிப்பதற்கு ஆயிரம் ரூபா பணம் தர மறுத்த தாயாரின் கழுத்தை இறுக்கி தரையில் தள்ளிவிட்டு கொலை செய்த 42 வயதுடைய குமாரசாமி வசந்தா என்பவரது சடலம் மீட்கப்பட்டதுடன் தாயை கொலை செய்த குற்றச்சாட்டில் 20 வயதுடைய அவரது மகனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் முதலாம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 7ம் திகதி 16 வயது மகள் சைக்கிள் ஓடியதை கண்ட தந்தையார் அவரை சிறு பிரம்பால் அடித்து கண்டித்ததை கண்ட சகோதரன் தந்தையாரை கம்பு ஒன்றினால் அடித்ததையடுத்த அவர் அங்கிருந்து எதிரே உள்ள வீடு ஒன்றில் புகுந்து மறைந்து கொண்டதையடுத்து அவர் பகுங்கியிருந்த வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு அவர் மீது பொல்லால் அடித்து தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 17ம் திகதி வெள்ளிக்கிழமை 4 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய மாரிமுத்து ரவிச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.

இதில் தந்தையை தாக்கிய இரண்டாவது மகனான 25 வயதுடைய இளைஞன் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் 19 வயதுடைய 3 வது மகன் கடந்த டித்தா புயல் காலத்தில் காணாமல் போள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

அதேவேளை 17 ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு மகாஓயா சூரியடி கொன்வல பகதியில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்த நிலையல் அந்த பகுதியைச் சேர்ந்த விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிவரும் முதியன்சலாகே பிரசாத் சதுன் பண்டார என்பவர் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வறு இடம்பெற்ற கொலை சம்பவ இடங்களுக்கு மட்டக்களப்பு பொலிஸ் தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.ரவிச்சந்திரன் மற்றும் பொலிஸ் சாஜன் நா.கிசோர்குமார் மற்றும் அரச சட்ட வைத்திய அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி, சந்திவெளி, ஏறாவூர், வவுணதீவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
மன்னார் வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்

மன்னார் வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.