தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா (Suriya), இலங்கை விமான நிலையத்தில் தனது ரசிகைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய செல்பி (Selfie) புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படமான “கருப்பு” (Karuppu) படத்தின் புதிய அப்டேட்கள் மற்றும் அது தொடர்பான பணிகளுக்காகவே அவர் இவ்வாறு கொழும்பு வந்தடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வந்தடைந்த அவரை வரவேற்ற இலங்கை விமான சேவையின் (SriLankan Airlines) பணிப்பெண்கள் மற்றும் ரசிகைகளுடன் அவர் மிகவும் உற்சாகமாகப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, “கொழும்பு வந்தடைந்த சிங்கம்” என அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.








