தமிழக சட்டப் பேரவை தேர்தல் இன்று நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தும் வாக்காளர்கள் வரிசையில் நிற்பதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலுக்காக தமிழ் நாட்டில் 4.82 கோடி பேர் வாக்களித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தேர்தலை விட 19 இலட்சம் பேர் இந்த தேர்தலில் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 73.63 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இம்முறை வாக்களிப்பில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








