சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (28) மட்டக்களப்பில் நடைபெற்றது.
நேற்று (28) காலை சுமார் 9.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் இந்த நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஊடக மையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, ஊடகவியலாளர் வா. கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெட்னம் ஆகியோர் இணைந்து தராகி சிவராம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஈகைச் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தியதுடன், ஒரு நிமிட மௌன அஞ்சலியும் அனுசரிக்கப்பட்டது.
பின்னர் நினைவுரைகள் இடம்பெற்றன.
.









