செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான இன்றைய தினம்
வெள்ளிக்கிழமை (01) மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்
அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட மூன்று மனித என்பு கூட்டு தொகுதியுடன் இதுவரையான
காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 244 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 240 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









