இலங்கையில் இலத்திரனியல் சிகரெட்டுகளை முழுமையாக தடை செய்ய அரசாங்கம் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது.
புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 2010இற்குப் பின்னர் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் சிகரெட் அல்லது புகையிலையை கொள்வனவு செய்யமுடியாத அளவு சட்டங்கள் திருத்தப்படவுள்ளன.
புகையிலை சார்ந்த பொருட்களை கொள்வனவு செய்யும்போது வாடிக்கையாளரின் அடையாள அட்டையை பரிசோதித்து அவர் 2010இற்கு முன் பிறந்தவரா என்பதை உறுதி செய்யும் அதிகாரம் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








