Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும நிதியில் 5,000 இலட்சம் முறைகேடு?; சபாநாயகருக்குச் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அவசரக் கடிதம்!

அஸ்வெசும நிதியில் 5,000 இலட்சம் முறைகேடு?; சபாநாயகருக்குச் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அவசரக் கடிதம்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நலன்புரி நன்மைகள் சபை ஊடாக 5,000 இலட்சம் ரூபாவிற்கு சற்று குறைவான தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்த மேலதிக பணக் கொடுப்பனவு தொடர்பில் நாடாளுமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அதிகாரப் பகிர்வு மற்றும் சமநிலைப்படுத்தல் முறையின்றி அரச நிதியைக் கையாள்வது ஒரு குற்றம், ஊழல் மற்றும் மோசடியாகும் என சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், அரசியலமைப்பின் 148 ஆவது உறுப்புரையின் கீழ் அரச நிதி தொடர்பான அதிகாரத்தைக் கொண்டுள்ள நாடாளுமன்றம் பின்வரும் வினாக்களுக்கான விடைகளை உடனடியாகக் கண்டறிய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் பணம் பெற வேண்டியிருந்த சுமார் 18 இலட்சம் குடும்பங்களில், எத்தனை குடும்பங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம்/இரட்டைக் கொடுப்பனவுகள் கிடைத்துள்ளன?

கேகாலை, மொனராகலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள இரட்டைக் கொடுப்பனவுகளின் அளவு தொடர்பில் இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா?

அஸ்வெசும பயனாளிகளுக்கு எந்தவித ஆராய்வும் இன்றி, பொறுப்பற்ற முறையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வழங்கப்பட்டுள்ள மொத்தப் பணத்தின் அளவு எவ்வளவு?

இரண்டு முறை பணம் (Double Payment) மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பணம் (Additional Payment/Extra Payment) பெற்றுக்கொண்ட மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

நலன்புரிச் சபையின் நிதி அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் முறை/நடைமுறைக்கு முரணாக இந்தப் பணக் கொடுப்பனவை மேற்கொண்ட அதிகாரிகள் யார்?

நலன்புரிச் சபையின் நடவடிக்கைகளுக்காக அரசியல் நியமனமாக இணைக்கப்பட்டுள்ள அதிகாரி/அதிகாரிகள்/ஆணையாளர் யார்?

அரசியல் நியமனங்களைப் பெற்று இவ்வளவு பாரிய தொகைப் பணத்தை வீணடித்தமை/முறைகேடாகக் கையாண்டமை/ஊழல் செய்தமை தொடர்பில் இதுவரை முறையான அதிகார சபையின் கீழ் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதா?

இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு நிதி விதிமுறை (F.R.) 135 இன் கீழ் நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளனவா? அவ்வாறு அதிகாரம் வழங்கிய அதிகாரி/அதிகார சபை யார்?

திறைசேரியினால் இந்த மேலதிகப் பணம் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அதற்குப் பொறுப்பான திறைசேரி அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா?

அவ்வாறு இல்லையெனில், இதுவும் மற்றொரு ஹேக்கர் தாக்குதலா? அல்லது தவறுதலாக நடந்ததா? அல்லது நிதி அமைச்சு மற்றும் திறைசேரிக்கு அனுபவமற்ற, அலுவலக நடைமுறைகள் தொடர்பில் எவ்வித அறிவும், புரிதலும் அற்றவர்களை அரசியல் ரீதியாக நியமனம் செய்ததன் விளைவா? என கேள்விகள்

சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
நோர்வூட்டில் கருப்புக் கொடிப் போராட்டம்; புதிய மதுபானசாலைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர்

நோர்வூட்டில் கருப்புக் கொடிப் போராட்டம்; புதிய மதுபானசாலைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.