Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தபால் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி; 6 இலட்சம் டொலர் மூன்றாம் தரப்பிற்கு மாற்றம்!

இலங்கை தபால் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி; 6 இலட்சம் டொலர் மூன்றாம் தரப்பிற்கு மாற்றம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிக பணம், இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (06) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மூன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தபால் திணைக்களம் இந்தப் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தபால் திணைக்களம் மேற்கொண்ட வெளிநாட்டுச் செலுத்துகை ஒன்று உரிய தரப்பினருக்குக் கிடைக்காமை தொடர்பான வழக்கின் விசாரணை இன்று கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் முதன்முறையாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

சர்வதேச தபால் பணிகளுக்கான கொடுப்பனவு விபரங்களை ‘Universal Postal Union’ (UPU) எனும் உலகளாவிய தபால் ஒன்றியம் வழங்குகிறது.

எனினும், இந்த விவகாரத்தில் அவர்கள் வழங்கிய உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மாறாக, வேறொரு மின்னஞ்சல் முகவரியுடன் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்த வேண்டிய பணம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என 2023 ஜூன் முதல் 9 போலி மின்னஞ்சல்கள் ஊடாக தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றில் மூன்றிற்கு தபால் திணைக்களம் பதிலளித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

2025 பெப்ரவரி 19 அன்று 435,864 அமெரிக்க டாலர்களும், 2025 ஒக்டோபர் 16 அன்று 190,891 அமெரிக்க டொலர்களும் தபால் திணைக்களத்தினால் மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதன்படி 626,755 அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பு ஒன்றிற்குச் சென்றுள்ளது.

இந்தப் பணம் சென்றடைந்த குறிப்பிட்ட நபர் அல்லது தரப்பு குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும், தண்டனைச் சட்டம், கணினி குற்றச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக தௌிவாவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

விசாரணை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், தபால் திணைக்களத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பை கள ஆய்வு செய்வதற்கு இலங்கை கணினி அவசர தயார்நிலை பிரிவிற்கு அனுமதி வழங்கினார்.

இந்த வழக்கை மீண்டும் ஜூலை 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
Next Post
தமிழகத்தில் புதிய அரசியல் சகாப்தம்; ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்!

தமிழகத்தில் புதிய அரசியல் சகாப்தம்; ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.