Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“மின் கட்டண உயர்வு அரசாங்கம் அறவிடும் கப்பம்”; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் சாடல்!

“மின் கட்டண உயர்வு அரசாங்கம் அறவிடும் கப்பம்”; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் சாடல்!

1 month ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மின் கட்டண அதிகரிப்பானது அரசாங்கம் அறவிடும் கப்பம் என்றே கருத வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் இன்று (9) விடுத்துள்ள விசேட அறிவிப்பு ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு வரும்வேளை, ஐக்கிய மக்கள் சக்தியும் இதில் கலந்து கொண்டு, தரமற்ற நிலக்கரி ஊழலின் சுமையை இந்நாட்டு மின்சார பாவனையாளர்கள் மீது சுமத்த வேண்டாம் என்று கோரிக்கைகளை முன்வைத்தது.

அந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவும், அரசாங்கமும் 18% ஆல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பானது 180 அலகுகளுக்கும் அதிகமாக பயன்படுத்தும் பாவனையாளர்களை, அதாவது உயர் மத்தியதர வர்க்கத்தினர், வியாபாரிகள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் ஆகியோரை பாதிக்கும்.

இந்த 18% கட்டண அதிகரிப்பை அரசாங்கம் அறவிடும் கப்பம் என்றே கருத வேண்டியுள்ளது.

தரமற்ற நிலக்கரியால் அரசுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு கட்டிக்கொள்ளவே இந்த அதிகரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

தரமற்ற நிலக்கரியையே இறக்குமதி செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சி வெளிக்கொணர்ந்த சமயங்களில், அதனை ஏற்றுக்கொள்ளாது, அது தரமற்றதல்ல என்று அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வந்தது.

பின்னர் நிலக்கரி தரமற்றதே என்றாலும் இங்கு ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று அரசாங்கம் கூறியது.

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் மின்சார உற்பத்தி குறைந்து எரிபொருள் சார்ந்த மின் நிலையங்களை நாட வேண்டிய நிலைக்கு ஆளானது. இதனால் செலவுகள் அதிகரித்தன.

இறுதியில் இந்த அதிகரிப்பை உயர் மத்தியதர வர்க்கத்தினர் மீதும், வியாபாரிகள் மீதும், தொழிலதிபர்கள் மீதும், தொழில்முனைவோர் மீதும் சுமத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்பைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாண்மையினர் கூட இந்த ஊழல் நிலக்கரி விவகாரத்தின் நட்டத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு இன்று ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு நடந்து கொள்வதற்காக வேண்டி மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசை அமைக்கவில்லை. ஊழல் நிறைந்த நிலக்கரி பெறுகைகளை முன்னெடுத்துவிட்டு, அதன் நட்டத்தை உயர் மத்தியதர வர்க்கத்தினர் மீதும், தொழில் முனைவோர் மீதும் சுமத்துவதற்கு மக்கள் இவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத்தரவில்லை.

இவ்வாறு கப்பம் அறவிடுவதற்கு நான் எனது எதிர்ப்பை தெரிவிக்கிறேன். இந்த கட்டண அதிகரிப்பு அநீதியான செயலாகும்.

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தவர்களிடமிருந்தே இதற்காண நட்டத்தை ஈடுகட்டிக் கொள்ள வேண்டும். நிலக்கரி ஊழலினால் ஏற்பட்ட நட்டத்தை மக்கள் மீது சுமத்தக் கூடாது. பெறுகை செய்து, இறக்குமதி செய்தோர்களே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். நாட்டு மக்களிடம் இருந்து ஊழலின் நட்டத்தை ஈடிகட்டிக்கொள்ள இவ்வாறு கப்பம் அறவிடுவதை முழு நாடே கண்டிக்கிறது.

அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெறப்பட வேண்டும். இதனால் நாட்டிற்கு வரவிருக்கும் முதலீடுகளும் கூட நாட்டை விட்டுச் செல்லும் நிலை ஏற்படும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
Next Post
கபில சந்திரசேன மரணம்; ஆய்வக அறிக்கைக்கு பின் இறுதி அறிக்கை

கபில சந்திரசேன மரணம்; ஆய்வக அறிக்கைக்கு பின் இறுதி அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.