Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை மாநகர சபைக்கு மேல் நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம்

கல்முனை மாநகர சபைக்கு மேல் நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளுக்காக தோண்டப்பட்டு, பின்னர் முறையாகச் சீரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளை புனரமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்ய கல்முனை மாநகர சபைக்கு கல்முனை மேல் நீதிமன்றம் மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு, இலங்கை நீதிக்கான மையம் (Center for Justice Sri Lanka) அமைப்பினால் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குடிநீர் இணைப்புப் பணிகளுக்காக மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல்வேறு வீதிகள் தோண்டப்பட்ட போதிலும், பணிகள் நிறைவடைந்த பின்னர் அவை முறையாக மறுசீரமைக்கப்படாததால் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகன சாரதிகள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்ததாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நேற்று முன்தினம் (08) வெள்ளிக்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. ஜுட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கல்முனை மாநகர சபை சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில், குடிநீர் இணைப்புகளுக்காக வெட்டப்பட்டிருந்த இடங்களில் இதுவரை சுமார் 300 வீதி பகுதிகள் முழுமையாகப் புனரமைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், எஞ்சியுள்ள வீதிப் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்ய மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுவதாக மாநகர சபை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த நீதிபதி, மீதமுள்ள அனைத்து வீதிப் புனரமைப்புப் பணிகளையும் நிறைவு செய்ய 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் விண்ணப்பதாரர் சார்பில் இலங்கை நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் மற்றும் செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் ஆகியோர் முன்னிலையாகினர்.

அதேவேளை, கல்முனை மாநகர சபை சார்பில் சட்டத்தரணி சப்ரின் சலாஹுதீன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் நீதிமன்றத்தில் முன்னிலை யாகியிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை
செய்திகள்

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை

August 12, 2026
மட்டக்களப்பில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்
செய்திகள்

மட்டக்களப்பில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்

August 12, 2026
ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்

August 12, 2026
பாதாள உலக பிரமுகர் பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!
செய்திகள்

பாதாள உலக பிரமுகர் பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

August 12, 2026
தனியார் பஸ் உரிமையாளர்களும் மெட்ரோ பஸ்களை இறக்குமதி செய்து சேவையில் ஈடுபடுத்த முடியும்
செய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர்களும் மெட்ரோ பஸ்களை இறக்குமதி செய்து சேவையில் ஈடுபடுத்த முடியும்

August 12, 2026
யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் எடுக்கவுள்ள நடவடிக்கை
செய்திகள்

யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் எடுக்கவுள்ள நடவடிக்கை

August 12, 2026
Next Post
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோசப் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோசப் விஜய்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.