தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகிலுள்ள 717 மதுபான கடைகளை மூடும்படி தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டர் வரையில் உள்ள 717 சில்லறை விற்பனை கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூட வேண்டும் என தமிழக அரசு வெயியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.








