மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த திருமதி வேலுப்பிள்ளை பொன்மணி அவர்கள் கடந்த நேற்று (16) காலமானார்.
1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி பிறந்த அவர், வடக்கு கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கோரி பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தவராக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது குடும்ப உறுப்பினருக்கான நீதி மட்டுமன்றி, வடக்கு கிழக்கெங்கும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர் உறவுகளுக்காக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊடக சந்திப்புகளிலும் அவர் தொடர்ந்து செயற்பட்டிருந்தார்.
“இனி எவரும் வலிந்து காணாமலாக்கப்படக் கூடாது என்பதற்காகவே எங்கள் போராட்டம் தொடர்கிறது” என அவர் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்ததாக உறவினர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.
திருமதி வேலுப்பிள்ளை பொன்மணி அவர்களின் மறைவு, நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.















