நாட்டில் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், விநியோக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூ ஆர் குறியீட்டு முறைமை தொடர்ந்து அமுலில் இருக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருள் நுகர்வை தேவைக்கேற்ப கட்டுப்படுத்துவது தற்போதைய சூழலில் முக்கியமானதாக இருப்பதால், கியூ ஆர் முறைமை தொடரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், எரிபொருள் விநியோகத்தில் ஒழுங்கை பேணுவதற்கும் தேவையற்ற பயன்பாட்டை குறைப்பதற்கும் இந்த நடைமுறை பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








